நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

Xi and Putin unite to criticise US, but fail to clinch big gas deal

Donald Trump family exempt from tax audits

China covertly train Russians to fight in Ukraine

ஈழத்தில் (2026) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- கொள்கைப் பிரகடனம்

பல்லாயிரக்கணக்கான மக்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், கொள்கைப் பிரகடனம். ஈழப்படுகொலையின் பதினேழாம் ஆண்டு நினைவு நாளான மே 18 - 2026, இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில், நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றிருந்தது.ஈழப் படுகொலை யுத்தம் பலி கொண்ட மக்களுக்கும், போராளிகளுக்கும் மக்கள் கதறிக் குளறி, அலறிய வண்ணம் வீர அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வில், முள்ளிவாய்க்காற் கொள்கை பிரகடனம் செய்யப்பட்டது.இப் பிரகடனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காற் கொள்கைப் பிரகடனம்:பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஈழத்தமிழ் உறவுகளே! தமிழ் இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ் இன அழிப்பு செயன்முறை ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்று பரிணாமத்தைக் கொண்டது.பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் நலன்களுக்காகவும், சிங்கள-பௌத்த பேரினவாத ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதற்காகவும், கூட்டு தமிழ் இன அரசியல் வேணவாவை, அதன் ஆயுத பரிமாணத்தை தமிழின அழிப்பின் ஊடாக முடிவுக்கு கொண்டு வந்ததன் மாயையை முள்ளிவாய்க்காலில் நிகழும் தமிழின அழிப்பு நினைவு கூரல் தகர்த்து எறிகின்றது.இரத்தம் தோய்ந்த மண்ணில் தேசத்திற்கான கனவு17 ஆண்டுகள் கடந்தும் இம்மண்ணிலே கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட இரத்த சொந்தங்களுக்கு நினைவு நடுகற்கள் இன்றி, ஆகாயமே எல்லையாக, அவர்களின் கனவுகளை சுமந்து வரும் காற்றே சாட்சியாக, இரத்தம் தோய்ந்த மண்ணில் தேசத்திற்கான கனவுகளை சுமந்து, அடக்கு முறையை எதிர்த்து, விடுதலைப் பயணத்தை கூட்டாகத் தொடர ஒரு தேசமாக முள்ளிவாய்க்கால் திடலில் ஒன்று கூடியுள்ளோம்.எமது கூட்டு அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை, அறத்தாற்பரியம் கொண்டவை. இவை இன்னொரு கூட்டு குழுமத்தின் கூட்டுத்தனி இருப்பை அச்சத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதையும் மீள வலியுறுத்துகின்றோம்.பேரரசுக் கட்டமைப்பின் வல்லாதிக்கப் போட்டியில் ஏக துருவ உலக ஒழுங்கை தக்க வைப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், பல்துருவ பூகோள ஒழுங்கை கட்டமைப்பதற்காக சீனா, ரஸ்யா போன்ற ஏனைய நாடுகளும் தத்தமது புவிசார் நலன்களை முன்னிறுத்தி போரினை முன்னெடுத்து வருகின்றன.புதிய புதிய உலக ஒழுங்குக் கட்டமைப்பு, நவதாராளவாத ஏகாதிபத்தியச் சட்டகத்திற்குள்ளிருந்தே கட்ட கட்டமைக்கப்படுமாக இருந்தால், பூர்வீகக் குடிகளின் இருப்பு தொடர்ந்தும் கேள்விக்குட்பட்டதே. ஏக துருவத்திலிருந்து பல் துருவ உலக ஒழுங்கிற்கு மாறினாலும் அது பேரரசுக் கட்டமைப்புச் சட்டத்தில் இருந்து மாறுபடப் போவதில்லை.இவ்வாறு மாறுபடுகின்ற உலக ஒழுங்கிற்கு ஏற்ப நமது கூட்டு விடுதலை வழித்தடத்தின் தந்திரோபாய உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி, தந்துரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன்று எங்கள் முன்வைத்துள்ளது.தமிழ்த்தேசிய விழுமிய அடிப்படைகள், மாற்று உலக ஒழுங்கிற்கான முன் மொழிதல்கள் என்பதனையும் பேரரசுக் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதையும், தமிழ் தேசிய வரலாற்றுப் பட்டறிதலுக்குட்பட்டு நாம் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.நவ தாராளவாத, தாராளவாத சட்டக அடிப்படைகளுக்கு உட்பட்டு கட்டமைக்கப்படும் துருவப் பேரரசு கட்டமைப்பு பூர்வீக குடிகளின் இருப்பையும், அவர்களின் நிலத்தினுடனான உறவையும் துண்டாடிக்கொண்டிருக்கிறது என்பதை வரலாறு கோடிட்டு காட்டியுள்ளது.பூர்வீக மக்களின் நில மீட்பிற்கான எழுச்சிபூர்வீக மக்களின் நில மீட்பிற்கான எழுச்சி பூகோளம் முழுவதும் ஆங்காங்கே எதிரொலித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். தமிழினம் உலகத்தின் மூத்த பூர்வீகக் குடி.தமிழினத்திற்கும் நிலத்திற்குமான உறவையும் அதனுடைய கூட்டுச் சார்புத் தன்மையையும் சங்ககால திணைக்கோட்பாடு தொல்காப்பியத்திலிருந்து எமக்கு தந்துள்ளது. திணை வாழ்க்கை முறை, வாழ்தலை, பிளவுகளாக கட்புலனுணர்ந்ததாக தெரியவில்லை. வாழ்தல், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிட உறவுமுறையில் தங்கி இருந்தது என்பதை அரச கட்டமைப்பிற்கு முன்னிருந்த திணை முறைமை தெளிவு படுத்துகின்றது.ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், ஈழத் தமிழ்த் தேசம் என்றுமில்லாதவாறு சிங்கள-பௌத்த தேசிய பேரினவாதத்தாலும், ஏக-பல்துருவ பேரரசுக் கட்டமைப்பினாலும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.அடக்கு முறையின் பல்வேறு வடிவங்கள் நாளாந்த வாழ்வியலாக சாதாரண மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசத்தின் நிலம் தொடர் அபகரிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமயமாக்கத்தின், சிங்கள-பௌத்தமயமாக்கத்தின் செறிவு அதிகரித்துள்ளது.மத அடையாளங்கள் குறிப்பாக சைவ சமய தலங்கள் தொடர் இலக்குகளாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழரின் பண்பாடு தேசிய தற்காலத்திற்கு பொருத்தபாடற்றதாகச் சித்தரிக்கப்பட்டு அழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.தமிழ் தேசிய பூர்வீக வரலாறுஈழத்தமிழரின் அடையாளங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன. தமிழ் தேசிய பூர்வீக வரலாறு சிதைக்கப்பட்டு, சிங்கள இனத்தை பூர்வீகக் குடிக குடிகளாக மாற்றும் வரலாறு உருவாக்கப்படுகிறது.உதாரணமாக திராவிடனாக இருந்த தந்த இராவண மன்னன் தற்போது சிங்கள ஆரியனாக மாற்றப்படுவதற்குரிய ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முன்னொரு காலத்தில் கல்வியில் பெருமை பாராட்டிய தேசம் இன்று கல்வியை தொலைத்து விட்டிருக்கின்றது.போதைப் பொருள் பாவனையை சிங்கள-பௌத்த பேரினவாத அரசு ஒரு போர் முறையாகக் கட்டமைத்து, இளைய தலைமுறையை திட்டமிட்டு அழித்து வருகின்றது.வளரும் தலைமுறையை போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்துவதின் ஊடாக தமிழின எழுச்சியை தொடர்ந்து தடுப்பதற்கான முயற்சிகளை ஏற்கனவே சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான எதிர்ப்பும் ஓர் அரசியல் யுத்தமே.தமிழ் இன அழிப்பிற்கான பொறுப்புக் கூறலின் நீதிப் பொறிமுறைகளை சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. இனவாதத்திற்கு எதிராக பேசுகின்ற அரசு, பொறுப்பு கூறல் பொறிமுறை அனைத்தையும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தக்க வைப்பதற்காக திரிபுபடுத்தி உள்ளது.தமிழ் இன அழிப்பிற்கான நீதிவேண்டிய நீண்ட போராட்டத்தை, சிங்கள அரசும் அதன் அடி வருடிகளும் மலினப்படுத்தியும், சிதைத்தும் வருகின்றன.நிலமீட்புக்கான போராட்டங்களையும், தமிழ் இன வரலாற்றுத்தடய அடையாளங்களின் மீட்புப் போராட்டங்களையும், வலிந்து காணாலாக்கப்பட்ட சொந்தங்களின் நீதி வேண்டிய போராட்டங்களையும் சிங்கள அரசு திட்டமிட்டு வன்முறையை பிரயோகித்து அடக்கி வருகின்றது.ஒட்டுமொத்தத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத அரசும் பேரரசுக் கட்டமைப்பும் இணைந்து ஈழத் தமிழினத்தின் மீது என்றுமில்லாதவாறு மிகப்பெரும் போரை வெவ்வேறு வீயூகங்களுக்கு ஊடாக கட்டமைத்துள்ளது. இப்போரை ஈழத்தமிழரின் கூட்டுஉள் கூட்டுஉளவியலின் மீதான போராக வடிவமைத்துள்ளதை மறுக்க முடியாது. ஈழத்தமிழ்ச்சொந்தங்களே!சிங்கள பௌத்த பேரினவாதமும், துருவப் பேரரசுக் கட்டமைப்பும் என்றுமில்லாதவாறு ஈழத் தமிழ்த் தேசத்தின் மீது பெரும் போரை கட்டவிழ்த்துள்ளது.இப்பெரும் போர், ஈழத் தமிழ்த் தேசத்தின் நிலம், கடல் சார் கேந்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்கிறது. ஈழத் தமிழ்த் தேசத்தின் புவிசார் அரசியலில் நிலம்-கடல் சார்ந்த கேந்திரத் தன்மை மிகவும் முக்கியமானது. ஈழத் தமிழ் தேச நிலம்-கடல் சார்ந்த கேந்திர தன்மையை சிங்கள-பௌத்த ஒற்றையாட்சிக்குட்பட்ட அலகிற்குள் உள்வாங்குவதனூடாகவும், ஈழத்தமிழ் தனித்தன்மையையும், தமிழ் தேசமாவதற்குரிய அலகுகளை இல்லாமல் செய்வதன் ஊடாகவும், சிங்கள பௌத்த பேரினவாதம் தனது ஒற்றை ஆட்சி அலகை திடப்படுத்தி வருகின்றது.தமிழ்த் தாயகத்தின் நீட்சியே புலம்பெயர் ஈழத்தமிழினக் கூட்டு அலகு என்பதை கண்காணித்து வருகின்ற சிங்கள அரசு, புலம்பெயர் ஈழத் தமிழினத்தின் மீதும் பெரும் போரை கட்டவிழ்த்துள்ளது.குறிப்பாக தொப்புள்க்கொடி உறவுகளுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி, தொப்புளக்கொடி உறவுகளை கத்தரிக்க முனைந்து வருகின்றது. இச்சூழலில் என்றுமில்லாதவாறு உறவுகை உறவுகளை ஆழப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை எழுகின்றது. எழுகின்றது.தற்போது ஈழத் ஈழத் த தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்காலில் சந்தித்ததை விட மிகக் கொடூரமான போர். ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும், அதன் இருப்பின் மீதும், கூட்டு உளவியலின் மீதும், தமிழ் தேசிய அடிப்படை விழுமியங்கள் மீதும் தொடுக்கப்படும் போர்.பெருமதிப்பிற்குரிய ஈழத்தமிழ் உறவுகளே!ஒட்டுமொத்தத்தில் தமிழ் தேசிய நம்பிக்கை மீதான போரை சிங்கள அரசும் துருவப் பேரரசுக் கட்டமைப்பும் கட்டவிழ்த்துள்ளது. தமிழ் தேசிய நம்பிக்கை தான் ஈழத் தமிழினத்தின் ஆத்மா.தமிழ் தேசிய கூட்டு உளவியலின் ஆத்மா தான் எங்களுடைய கூட்டுத்திராணி. இதை வலுப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை என்றுமில்லாதவாறு இன்று எம்முன் வைக்கப்படுகின்றது.நமக்குள்ள மிகப்பெரும் ஆயுதமாக விரிந்து கிடப்பது தமிழ் தேசிய நினைவு தினம். நாங்கள் நினைவு கூரும் வரைக்கும் எங்களை யாராலும் அழிக்க முடியாது. கழிந்த காலம் எமக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவி செய்கின்றது.தற்போதைய வரலாற்றுக் காலம் பண்பாட்டு மீள் எழுச்சிகான காலம். ஈழத் தமிழினம் எமக்கான வரலாற்று வேர்களைத் தேடிப் பயணிக்க வேண்டிய காலம். பண்பாட்டு மீள்எழுச்சி ஈழத் தமிழினத்திற்கான பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்துகின்றது.பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஈழத்தமிழ் உறவுகளே!முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலி திடலில் நினைவு கூருவது மீண்டும் எமதினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது.ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரச அடக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காக தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட அணி திரள்வதைத் தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்படவில்லை.இவ்வருடம் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் 50வது ஆண்டு நினைவு. சுதந்திரமும் இறைமையுமுடைய ஈழத் தமிழ்த் தனியரசே ஈழத் தமிழினத்தின் கூட்டு இருப்பையும், தமிழர் தேசத்தின் இருத்தலையும் உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்று உரக்கக் கூறிய வரலாற்று நிகழ்வு.தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படும் இத்தீர்மானத்தின் அடிப்படைகளையே முள்ளிவாய்க்கால் பிரகடனம் ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகின்றது.இரத்தம் தோய்ந்த  இம்மண்ணிலிருந்து போராட, கனத்த காற்று சுமந்து வரும் அவர்களின் நினைவுகளின் மீதும் நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம்.01. தமிழ்த் தாயகம் சிங்கள-பௌத்தமயமாக்கப்படுவதைத் தடுக்கவும், தமிழ்த் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும்.02. தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டி அரச பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் உடந்தை தன்மையையும் வலியுறுத்தி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும்.03. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்.04. கூட்டு ஈழத் தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தடுக்கவும்.05. தமிழ் தேசிய நம்பிக்கையின் மீது உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்து அடிபணியாது போராடுவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு-வடக்கு கிழக்கு (இலங்கை)மே 18 2026

Xi and Putin unite to criticise US, but fail to clinch big gas deal

Xi and Putin unite to criticise US, but fail to clinch big gas dealBy Liz Lee and Ethan Wang-Reuters May 19, 2026SummaryXi hosts Putin only days after summit with TrumpIn joint statement, they condemn Trump's missile shield planLeaders proclaim strong ties, but no breakthrough on gas dealBEIJING, May 20 (Reuters) - China and Russia condemned U.S. President Donald Trump's Golden Dome missile defence shield plans and Washington's "irresponsible" nuclear policy at a summit on Wednesday, a week after President ​Xi Jinping hosted Trump in Beijing.A joint statement issued after Xi's summit with Russian President Vladimir Putin served to underline that, while the Chinese leader seeks stable and constructive relations with ‌Trump, he differs fundamentally with him on key issues where China's position is closely aligned with Russia's.The statement said Trump's plan for a ground- and space-based missile interceptor system threatened global strategic stability and criticised Washington for allowing a treaty restricting the U.S. and Russian nuclear arsenals to expire.The treaty lapsed in February and Trump did not respond to Moscow's proposal to extend its missile and warhead limits by a year - something that some U.S. politicians argued would have hindered the U.S. from responding to a nuclear build-up by China.Yet while ​speaking in unison on global security issues, the two leaders failed to reach a breakthrough that Moscow has long been seeking - a contract for a new pipeline that would enable it to more than ​double the amount of natural gas it sells to China.XI'S BACK-TO-BACK SUMMITSXi was wrapping up a remarkable week of diplomacy in which he met the leaders of China's ⁠most powerful strategic rival and one of its closest partners.With Trump seeking an exit from a war with Iran and Putin's forces largely bogged down in Ukraine, the summits provided China's leader with a chance to showcase Beijing ​as a pillar of global stability and an indispensable diplomatic player."Xi does appear to hold the stronger position relative to both Putin and Trump. Both leaders are grappling with conflicts of their own making that have proven far more ​difficult to resolve than initially anticipated," said Patricia Kim, a foreign policy fellow at the Washington-based Brookings Institution."Xi, meanwhile, has been able to focus more squarely on strengthening China internally while projecting an image of a stable and confident great power on the global stage."While the summit with Trump was largely about managing tensions, the encounter with Putin posed a different challenge - how to demonstrate progress in a relationship that the two sides have already proclaimed is "without limits".Xi and Putin, who have met more than 40 times, both ​stressed the closeness of the Russia-China ties that they sealed in 2022 with the signing of a strategic partnership treaty, less than three weeks before Moscow's full-scale invasion of Ukraine.Moscow had signalled ahead of the visit that it was ​seeking further energy agreements with China, the largest buyer of Russian oil, including pipeline supplies and sea-borne shipments.Russian Deputy Prime Minister Alexander Novak said China was interested in long-term Russian oil supplies and increasing volumes, which he said were up 10% in ‌four months.ELUSIVE ⁠GAS DEALDuring Putin's last visit in September 2025, Russian gas giant Gazprom said both sides had agreed to move forward with Power of Siberia 2, a prospective 2,600-km (1,616-mile) pipeline to carry 50 billion cubic metres (bcm) of gas per year from Russia to China via Mongolia.China has said very little publicly about the project. While Xi said on Wednesday that cooperation in energy and resource connectivity should be the "ballast stone" in China-Russia relations, he did not mention the pipeline.Key issues such as gas pricing remain unresolved, and analysts expect negotiations could take years.The Kremlin said both sides had reached a "general understanding on the parameters" of the project, although no details or clear timeline were agreed. Novak said Russia and China ​were finalising contracts for supplies via the pipeline."The core disagreements ​on pricing, financing and contract terms do not ⁠appear to have been resolved," said Daniel Sleat, senior policy advisor at the Tony Blair Institute for Global Change."Russia needs this deal more urgently than China does after losing much of its European gas market, while Beijing still appears content to move slowly and preserve flexibility over future energy supply options."HONOUR GUARD AND GUN SALUTEXi welcomed Putin with ​an honour guard and a gun salute at the Great Hall of the People in Beijing, as children waved Chinese and Russian flags. They later dined on ​Peking duck and Jinhua cured ⁠ham at a banquet, and drank tea together with a small number of close aides, before Putin's plane departed.Xi said the countries should focus on long-term strategy and promote a "more just and reasonable" global governance system, according to Chinese state news agency Xinhua."China-Russia relations have reached this level because we have been able to deepen political mutual trust and strategic cooperation," Xi said.Putin said Russian-Chinese ties had "reached a truly unprecedented level and continue to develop".In their joint declaration, the two sides outlined ⁠plans for further ​cooperation across a vast range of areas, from artificial intelligence to protecting rare tigers, leopards and pandas.They accused the United States and Israel ​of violating international law by attacking Iran, and expressed their "resolute opposition to hegemonism and unilateralism"."The global agenda of peace and development is facing new risks and challenges, with the danger of fragmentation of the international community and a drift back towards the 'law of the jungle'," the joint ​declaration said, according to the Kremlin.Reporting by Liz Lee and Ethan Wang in Beijing, Jekaterina Golubkova in Tokyo; Additional reporting by Beijing newsroom and Guy Faulconbridge and Vladimir Soldatkin in Moscow; writing by Mark Trevelyan; editing by Philippa Fletcher

மே நாள் 2026 வாழ்க! தேசிய, தொழிலாளர் புரட்சி ஓங்குக!!

மே நாள் வாழ்க! தொழிலாளர் மே நாள் வாழ்க!  முள்ளிவாய்க்கால் தேசிய தினம் வெல்க!!அன்பார்ந்த தமிழீழ மக்களே, போர் ஓய்ந்த போராளிகளே, ENB வாசகர்களே, தோழர்களே, பெண்களே, இளையோரே அனைவருக்கும் புரட்சிகர மே முதல் நாள், மே 18 முள்ளிவாய்க்கால் நாள் வாழ்த்துகள்.மே முதல் நாள் உலகத் தொழிலாளர் தினம், மே 18 முள்ளிவாய்க்கால் ஈழத் தேசிய தினம். ஈழ தேசியப் பிரச்சனை உலக ஜனநாயகப் பிரச்சனையின் பகுதியாகிவிட்ட சகாப்தத்தில் நாம் வாழ்கின்றோம்.எனவே தான் மே முதல் நாளையும், பதினெட்டாம் நாளையும் எமது செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், சரிபார்த்து முன் செல்லவுமான பொதுத் தருணமாக நாம் வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.எமது மே 2026 முழக்கங்கள்: அதாவது தொடர்ந்துவரும் உடனடி எதிர்காலத்தில் நமது நடைமுறை அரசியல் -பிரச்சாரச்-செயற்பாடுகளை, நெறிப்படுத்தும் கொள்கை,கோட்பாட்டு நிலைப்பாடுகள்.புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்கப் போராடுவோம்!3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு தம் நாட்டு உழைக்கும் மக்களையும்,அண்டை அயல் நாடுகளையும் தயார்செய்து, யுத்தத்துக்குள் தள்ளுவதை முறியடிப்போம்! 5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிர்வோம்! பண ஆதரவளிப்போம்!!அன்பார்ந்த தமிழீழ மக்களே, உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்படும் தேசங்களே;தொடர்ந்து வந்த சுமைகளோடு மேலதிகமாக அமெரிக்க இஸ்ரேலிய பாசிசபிற்போக்கு முகாம், ஈரான் நாட்டின் மீது தொடுத்த அநீதியான நாசகார பாசிச ஆக்கிரமிப்பு நிர்மூல யுத்தம் மேலதிக சொல்லொணாச் சுமைகளை, உலக மக்கள் மீது சுமத்திவிட்டுள்ளது. ஈரான் மட்டுமல்ல உலகின் வேறு பல பாகங்களிலும்,நாடுகளிலும், தேசங்களிலும் போர் மூண்டெரிந்தவண்ணம் உள்ளது.புதிய போர்க்களங்கள் திறக்கப்படவுள்ளன.`` மூன்றாம் உலகப் போர்`` பற்றிய பேச்சு சர்வசாதரணமாகிவிட்டது.மட்டுமல்ல அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக ஈரான் போரில் இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், உலக அமைதி, சமாதானம் மீது அக்கறை கொண்டுள்ள மானுடர் மத்தியில் கரிசனைக்குரிய தேடலும், விவாதமும் இடம் பெற்று வருகின்றன.அவர்களது கவலை அதிகரித்து வருகின்றது.இராணுவ (பாதுகாப்பு) துறையில் நேற்றோ(NATO) பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது.அமெரிக்கா முன்போல் நேற்றேவுடனான உறவைப் பேணுவதற்கு தயாராக இல்லை. ஏனைய ஐரோப்பிய நாடுகள் சில அமெரிக்காவில் தங்கியிராத நேற்றோவை கட்டியமைக்க முயல்கின்றன. பிரான்ஸ், ஐரோப்பாவுக்கு என தனியான ஒரு இராணுவக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்ப நெடுங்காலமாக குரல் எழுப்பிவருகின்றது.பாதுகாப்புத் துறையில் மட்டுமல்ல, இதர பல்வேறு துறைகளிலும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவுகின்றன. இவை ரம்ப் நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் வரைக்குமானதா, அல்லது ஒட்டு மொத்த ஏகாதிபத்திய அமைப்பு முறையும் சார்ந்த, அதில் வேர்கொண்டு முழு அமைப்பு முறையையும் உலுக்கி உலுப்புகின்ற பிரச்சனையா என்கிற கேள்வி உள்ளது.உலகளாவிய பொருளாதார நிலைமையின் ஒட்டுமொத்த அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு நாடு, ஒரு நாட்டின் ஆட்சி முறை, அதன் அரசுத் தலைவர் அல்லது தலைவி சார்ந்ததாக அல்லாமல் முழு அமைப்பும் சார்ந்ததாகவே உள்ளது.உதாரணத்துக்கு-மிகச் சிறந்த உதாரணம்- நேற்றோவை எடுத்துக்கொண்டால் நாட்டுக்கு நாடு வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், அனைத்து நாடுகளிலும் படைத்துறைச் செலவினம் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்து, தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.இதன் தனிக்குறிப்பான தன்மை, இந்த இராணுவச் செலவினமும் ஆயுதப் பெருக்கமும், நவீன மயமாக்கலும் தனி ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பன்மடங்கு அதிகமான, அவசியத்துக்கும் அப்பாற்பட்ட அதிகரித்த தயாரிப்புகளாக இருப்பதாகும்.இலங்கை போன்ற சின்னஞ்சிறிய நாட்டிலும், கிரீன்லாண்ட் போன்ற மிகச் சிறிய சனத்தொகை கொண்ட தீவிலும் இதனைத் தெளிவாகக் காணமுடியும்.மேலும் எழுந்து வரும் ரசிய சீன ஏகாதிபத்தியவாதிகள், இறுதியாக அமெரிக்கவுடனான ஒரு போருக்காகவே தம்மை தயார் செய்து வருகின்றனர்.போதாததற்கு பிராந்தியம் பிராந்தியமாக வலிமைகொண்ட விரிவாதிக்க அரசுகளும், அசுர இராணுவ வலிமையைக் கட்டமைப்பதும், தமக்கிடையே கூட்டமைப்பதும் ஒரு போக்காகிவிட்டது!இவ்வாறாகத்தானே மூன்றாம் உலகப் போர் என்பது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிட்டது.`` ஏகாதிபத்தியம் என்றால் போர்`` என்ற மாமேதை லெனின் மார்க்சிய மதிப்பீடு உண்மை என்பது வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகிவிட்டது.உலகப் போர் என்பது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிட்டது, என்பதின் பொருள் மூன்றாம் உலகப் போர் முழு அளவில் ஆரம்பித்துவிட்டது என்ற பொருளில் அல்ல,மாறாக அதை நோக்கிய இராணுவப் பயணம் ஆரம்பித்துவிட்டது என்கிற பொருளிலேயே ஆகும்.ஏகாதிபத்தியம் ஏன் போரை நாடுகின்றது?வசதி கருதியும், தற்காலத்துக்கு சமாந்தரமானதுமான ஒரு காலப்பகுதியான சுமார் ஒரு நூற்றாண்டுக்கு சற்று மேற்பட்ட முதல் உலகப் போர் முதலான காலத்தை எடுத்துக் கொண்டால் மட்டும் கூட `எண்ணற்ற` போர்களை எண்ண முடியும்!எனவே போர்கள் இருந்து வருகின்றது, தொடர்ந்தும் இருந்து வரும். வர்க்க சமுதாயம் உள்ள வரையில், வர்க்கப் பகைமை இணக்கம் காணா நிலையை எட்டும் வேளைகளில் எல்லாம் போர் மூளும், நிகழும், தொடரும்.ஒரு சில மோசமான முல்லாக்கள் மற்றும் பயங்கரவாதிகளினதோ, அல்லது சுதந்திர உலகின் ஒப்பற்ற தலைவர்களினதோ கர்ப்பத்தில் இருந்து போர் பிரசவிப்பது கிடையாது.மாறாக அது புறவய உலகின் சமூக வர்க்க முரண்பாடுகளின் இணக்கம் காணவியலா பகைமையின் அவசியத்தில் இருந்து எழுகின்றது.இதனால் போரை ஆய்வு செய்வதானால் இந்த அவசியத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.என்றும் எமக்கு முன்னுதாரணமான மா மேதை லெனின் முதல் உலகப் போரின் குறிபொருள் குறித்து கூறியதாவது:    ``அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டது. ஆயுத தளவாடங்களின் பெருக்கம், முன்னேறிய நாடுகளில் முதலாளித்துவ  வளர்ச்சியின் அதி உயர் கட்டமான ஏகாதிபத்தியக் கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைதல், மற்றும் அதிகம் பிற்பட்டதான கிழக்கு ஐரோப்பிய முடியாட்சிகளின் அரசவம்சங்களின் நலன்கள் ஆகியவை இந்தப் போரைத் தவிர்க்க முடியாத வகையில் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும்,அவ்வாறு ஏற்படுத்தியுள்ளன. பிரதேசங்களைக் கவர்ந்து பறித்தல், பிறதேசங்களை அடிபணிய வைத்தல், போட்டியிடும் தேசங்களை நாசப்படுத்தல், அவற்றின் செல்வங்களைச் சூறையாடுதல், ரசியா,ஜேர்மனி,பிரிட்டன் மற்றும் இதர நாடுகளின் உள்நாட்டு  நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புதல், தொழிலாளர் ஒற்றுமையைக் குலைத்து தேசிய வாதம் மூலம் அவர்களைப் பயனற்றவர்களாக்குதல், பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப்  பலவீனப்படுத்த அவர்களது முன்னணிப் படையை அழித்தொழித்தல்- இவையே தற்போதைய போரின் ஒரே மெய்யான சாராம்சம் மற்றும் குறிபொருள் ஆகும். ``போரும் ரசிய சமூக ஜனநாயகமும்-லெனின்இத்தகைய ஒரு சமுதாய அவசியம் இன்று தயாரிப்பு நிலையில் இருக்கும் மூன்றாம் உலகப்போருக்கும் உண்டு. அந்த முன் நிபந்தனைகள் தான் இன்றைய போர்த் தயாரிப்புகளைத் தூண்டும் சமூக சக்தி ஆகும்.முதல் உலகப் போரின் குறி பொருள் குறித்த லெனின் வரையறை பொதுக் கோட்பாடுகள் என்ற வகையில் இன்றைய நிலைமைகளுக்கும் பொருந்தும். ஆனால் குறிப்பான தன்மைகள் வேறானவை, தனி விசேசமானவை, அவை இன்றைய குறிப்பான புறச் சூழலில் இருந்து, ஆய்ந்து அறியப்படவேண்டியவை. இதனை நிகழ்ச்சிப் போக்குகளை பின் தொடர்ந்து சென்று, கை நாடி பிடித்துத்தான் கண்டறியமுடியும். அந்தப் பருண்மையான ஆய்வில் இருந்துதான் நமது `அரசியல் இராணுவ போர்த் தந்திரம், மற்றும் செயல் தந்திரங்களை வகுத்துக்கொள்ள முடியும்.அதுவே இன்றைய மே நாளில் நாம் தேர்ந்து கொள்ளும் தத்துவார்த்த பணியாகும்.எமது நடைமுறைப் பணி என்ன?முதலாவதாகவும்,முதன்மையாகவும் நமது நடைமுறைப் பணி என்னவென்றால் இந்த நாசகார மனிதப் பேரழிவுப் போர் முழு அளவில் ஒரு உலகப் போராக வெடிப்பதைத் தடுப்பதாகும்.எமது அரசியல் பிரச்சாரப் பணி அனைத்தும் இந்த ஒற்றைக் குறிக்கோள் மீது குவிக்கப்படவேண்டும்.உலகப் போர் நிலைமை குறித்த ஒரு பொதுச் சித்திரம்.1) அமெரிக்காவின் தனி உலக மேலாதிக்க ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பு தகர்ந்து, ரசிய சீன நாடுகள் போட்டி ஏகாதிபத்திய நாடுகளாக எழுந்து, ஏகபோகத்துக்காகப் போரிடும் ஒரு பல்துருவ உலக ஒழுங்கமைப்பு உலகில் உருவாகியுள்ளது.2) அமெரிக்காவினதும் இதர ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளினதும் ஆளும் வர்க்கங்களுக்குள் ஒரு புதிய அணி உருவாகிவருகின்றது. இது கடந்த பத்து அல்லது இருபது குறுகிய அண்மைய காலத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாகவும், அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் இருந்தும் எழுந்து வந்திருக்கும் புதிய ஒரு நிகழ்வாகும். அமெரிக்காவில் இது முன்னைய ஆளும் கும்பல்களைக்காட்டிலும் ஆகப் பிற்போக்கானதும், ஆகப் பாசிசத் தன்மை மிக்கதும், ஆக ஒழுங்கு முறை கட்டுப்பாடு அற்றதும், ஆக ஒழுக்கம் கெட்டதுமான கொலைபாதக காட்டுமிராண்டிக் கும்பலாக உள்ளது. இது தான் போர்த்தயாரிப்புகளை முன்னின்று நடந்துகின்றது.முந்தி உந்தி தள்ளுகின்றது.3) இரண்டாம் உலகப் போரை அடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையின் கீழ் இதர ஏகாதிபத்தியவாதிகள் இணைந்து மற்றும் அடிபணிந்து உருவாக்கிய அனைத்து ஒழுங்கமைப்பையும் ,இக் கும்பல் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றது.இதற்கு மாற்றாக கடவுளுக்கு ஈடான ஒரு மன்னனையும், அவனைச் சூழ்ந்த ஒரு ஆயுதமேந்திய அப்போஸ்தலர் (apostle) சபையையும் கொண்டு உலகை கட்டியாள திட்டமிடுகின்றது.இதனை பாசிச வன்முறையின் மூலம் மட்டுமே சாதிக்க இயலும் என்பதால் போர் பொதுவிதியாக மாறிவருகின்றது.4) இது ஏகாதிபத்திய முகாமுக்குள்ளும், அணிகளுக்குள்ளும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து தீவிரப்படுத்துகின்றது.5) எனினும் உலகப் போர் விடயத்தில், ``அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும்`` அந்தக் கம்பத்தைச் சுற்றியே வட்டமிடுகின்றன.ஏனெனில் இவை அனைத்தும் அந்த நிதிமூலதனக் கம்பத்துடன் கட்டுண்டுள்ளன.எனவே அவர்கள் அனைவரும் ஒருங்கு சேர இந்த `` ஆயத்தத்தில்`` ஈடுபட்டுவருகின்றன.முரண்பாடு என்பது  இதற்கு உட்பட்டதே ஆகும்.இதுவரையில்!6) குறிப்பாக தொடர் காலனிய நாடுகளின் முதலாளித்துவ பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களும்,கட்சிகளும், அரசாங்கங்களும் தாம் சேரும் அணியின் வெற்றிக்காக உள்நாட்டு உழைக்கும் மக்களைப் பலிக்கடாக்களாக்க தயாராகிவருகின்றன.7) இப்போர்த் தயாரிப்பு முயற்சிகள் தேசியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்துகின்றன.இதனால் தேசங்களின் சுயநிர்ணய உரிமை பாட்டாளிவர்க்கம் உயர்த்திப் பிடிக்கவேண்டிய தவிர்க்க இயலாத ஜனநாயகக் கோரிக்கையாகவுள்ளது.8) மேலும் ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் ஒரு தேசம் ( உ+ம் இலங்கையில் ஈழம்) மட்டுமல்ல, அதிகாரபூர்வ அந்த நாடே கூட ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியவைக்க அரசியல் இரணுவத் தலையீடுகள் கூர்மையடைகின்றன.(உ+ம் ஈரான்). அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் (அவர்கள் எவ்வளவுதான் பிற்போக்கானவர்களாக இருந்தாலும்) ஆட்சியதிகார உரிமை-இறையாண்மை-அச்சுறுத்தப்படுகின்றது, அல்லது பலவந்தமாகப் பறிக்கப்படுகின்றது.இத்தகைய சூழலில் அந்நாடு போராடும் ``தாய் நாட்டின் தற்காப்பை`` ஆதரிப்பது ஜனநாயகக் கடமையாகும்.   இன்றைய உலகச் சூழலில் இந்தியா.இந்தியா நிலப்பரப்பாலும் சனத்தொகையாலும் ஒரு பரந்த நாடு.ஆசியக் கண்டத்தில் ஒரு முக்கிய நாடு.இவை போன்ற காரணங்களால் இந்திய ஆளும் வர்க்கத்தின் பேர ஆற்றல் மிகவும் வலுவானதாகும். இரட்டைத்துருவ உலக ஒழுங்கு நிலவிய காலத்தில் கூட இந்தியா ஒரு புறம் அமெரிக்க பிரித்தானிய உறவையும், மறுபுறம் சோவியத் ஜூனியனுடனான உறவையும் அக்கம் பக்கமாக பேணிவந்தது.இப்போதும் அப்படியே நடந்துகொள்கிறது,இந்த சா-நக்கி-யத்தில் இந்தியா பேர் போனது, புகழ் பூத்தது.உக்ரைன் போரில் தாம் நடுநிலை வகிக்கவில்லை, சமாதானத்தின் பக்கம் நிற்பதாகக் கூறுகின்றது.மறுபுறம் இஸ்ரேலோடு `அண்ணன் தம்பி` உறவு கொண்டாடி, கட்டியணைத்து முத்தமிட்டு, பாலஸ்தீனத்தைக் காட்டிக்கொடுக்கின்றது. அமெரிக்காவுடன் ஐரோப்பா மற்றும் ரசியா கொண்டுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துவருகின்றது. உடனடியாக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராகவும், தொலைநோக்கில் உலகப்போர்த் தயாரிப்புக்காகவும் பாரிய அளவில் படைப் பெருக்கம் செய்துவருகின்றது.அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானுக்கு எதிராக கட்டவிழ்த்த நாசகார பாசிச ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இந்தியா எடுத்த நிலை வெட்கக் கேடானது. நிராயுதபாணிகளான தனது சொந்த விருந்தினரை அமெரிக்கா படுகொலை செய்ய காரணமாக இருந்தது இந்தியா. ஒரு கண்டனம் தெரிவிக்கக் கூட வக்கற்றுக் கிடந்தது.ஒரு பல்லிமுட்டை அளவு நாடு சிறீ லங்காவுக்கு இருந்த தைரியம் கூட இந்த அகண்ட பாரதத்துக்கு இருக்கவில்லை.இதன் மூலம் இந்தியா தன்னை மட்டுமல்ல BRIC அமைப்பையும் அவமானத்துக்கு உள்ளாக்கியது.இவையெல்லாம் `இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தந்திரக் கூட்டாளி இந்தியா` என்ற உறவு நிலை இன்றும் தொடருவதையே காட்டுகின்றது. திருவாளர் டொனால்ட்டுடன் உடன் இந்தியாவுக்குள்ள சச்சரவு வர்த்தகம் மற்றும் உடல் நலம் சார்ந்தது!இலங்கை எதிர்நோக்கும் அபாயம்:1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் இப்போதும் அமுலில் உள்ளது. தற்காலிக வட கிழக்கு மாகாண இணைப்பை வழக்காடி தகர்த்த செஞ்சட்டை வீரம், ஒப்பந்தத்தை அப்படியே வைத்துள்ளது.ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்கள விவசாய இளம் சந்ததியை பலிகொடுத்துவிட்டு IPKF நினைவு மண்டபத்துக்கு காவல் காத்துவருகின்றது ஜே.வி.பி. பிக்கு முன்னணி அனுரா ஆட்சி. மறுபுறம் SOFA ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா நேரடியாகவே மிரட்டி தலையீடு செய்கின்றது. அநியாய IMF கடனில் ஜே.ஆர், ரணில் கடைப்பிடித்த அதே நிதிமூலதன அடிமைப்பாதையில் நாட்டை `` மீட்டு`` வருகின்றது அனுரா அரசு!ஈரான் போர் நிரந்தரமாக ஓயாது.பெப்ரவரி 28, 2026 இற்கு முந்திய நிலைக்கு இனி உலகமோ, மேற்கு ஆசியாவோ திரும்பாது.மேற்காசிய மறுபங்கீட்டுப் போருக்கு டியாகோ காசியா இராணுவத்தளம் எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஈழ-திருமலைத் துறைமுகமும் முக்கியமானதாகும்.இங்கே அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும். கொத்திக் கலைக்கப்படுவது இலங்கை மக்களாக இருக்கும்.இத்தகைய அபாயத்தில் இருந்து இலங்கையையும், உலகத்தையும் பாதுகாக்க மீண்டும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் செயலுக்கு அறைகூவல் விடுக்கின்றோம். 1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!உலகெங்கும் வியாபித்துள்ள  அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்க போராடுவோம்!3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை முறியடிப்போம்! 5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! பண ஆதரவளிப்போம்!!புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!இறுதி வெற்றி உழைக்கும் ஈழமக்களுக்கே!!!புதிய ஈழப் புரட்சியாளர்கள். ඊලම් නව බෝල්ෂෙවික්වරු Eelam New Bolsheviks (ENB)