UPI ID : enb@axis.com
2022 போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்- ஜனாதிபதி பங்கேற்புடன் மீண்டும் ஆரம்பமான நிந்தவூர் கலாசார மண்டப நிர்மாணப் பணிகள்தினகரன் May 22, 2026 மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது என்றும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பது ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.அதேபோல், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், நிந்தவூர் பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபா ஆகும். இதில் 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் முழுமையான நிர்மாணப் பணிகள் 2027-12-31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க;நிந்தவூர் கலாசார மண்டப நிர்மாணப் பணிகள்-திறப்புவிழாவில் திரண்ட மக்கள்இந்த நாட்டு மக்கள் இணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மெலே, பேர்கர் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் ஆதரவும் கிடைத்தது. வரலாற்றில் எந்தனை ஆட்சிகள் வந்தாலும் இந்த அரசாங்கம் சகல மக்களினதும் சகல பிரதேசங்களினதும் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.நீங்கள் எம்மிடம் ஆட்சியை ஒப்படைக்க பல காரணங்கள் உள்ளன. நீண்ட காலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் மோதல்கள், அவநம்பிக்கைகளை வளர்க்கும் இனவாத அரசியலே காணப்பட்டது. இனவாத அரசியலைத் தோற்கடிப்பதற்காக இந்த நாட்டு மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். ஒற்றுமையை கட்டியெழுப்பவே எமக்கு ஆணை வழங்கினார்கள். எமது நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். சிங்கள,தமிழ், முஸ்லிம்,மெலே, பேர்கர் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழும் நிலையை ஏற்படுத்துவோம். கடந்த காலத்தில் பல்வேறு மோதல்கள் இருந்தன. அச்சத்தோடு தான் வாழ்ந்தார்கள்.ஆனால் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. எந்த இனவாத அச்சமும் இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் செயற்பட இடமளித்துள்ளோம். எங்காவது மோதல்கள் நடந்ததா? அச்சத்துடன் இருக்கும் நிலை உருவானதா? அந்த அரசியல் நிறைவடைந்து விட்டது. அந்த நோக்கத்திற்காகத் தான் நீங்கள் எமக்கு ஆணையை வழங்கினீர்கள்.அடுத்து எமது நாட்டில் இலஞ்சம்,ஊழல் மற்றும் வீண் விரயத்தை ஒழிக்க மக்கள் ஆணையை வழங்கினார்கள். அரசியல் அதிகாரத்தில் இருந்து திருட்டை முழுமையாக அளித்துள்ளோம். ஆனால் செய்வதற்கு எதுவுமின்றி பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.நானும் எனது அமைச்சரவையும் எனது எம்.பிக்களும் மக்களின் ஒரு சதத்தையும் திருடவோ வீண்விரயம் செய்யவோ மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். அவ்வாறு யாராவது இருந்தால் அவர்களுக்கு எமது அரசில் இடமில்லை. அவ்வாறான அரசாங்கத்தை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். இலஞ்ச ஊழல் பெறுவோருக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டவேண்டிய தேவை இருந்தது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுகள் பற்றி உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.பெருமளவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. பல மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நீதிமன்றம் நியாயமாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.மோசடிக்காரர்களுக்கு எதிராக தண்டனை வழங்க மக்கள் தந்த ஆணையை நாம் நிறைவேற்றுகிறோம்.அடுத்து, சட்டம் நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. சாதாரண மக்களுக்கு எதிராகவே சட்டம் செயற்படுத்தப்பட்டது. பணம் இருந்தால், அதிகாரமிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது. ஏழையாகவோ அதிகாரம் இன்றியோ இருந்தால் சட்டம் அமுல்படுத்தப்படும்.பணம் இருக்கிறதா அதிகாரம் இருக்கிறதா ஏழையா பணக்காரரா என்ற பேதமின்றி அனைவருக்கும் சமமாக சட்டம் நிறைவேற்றப்படும்.முன்னாள் ஜனாதிபதிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன் நிறுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளோம். இலங்கையில் ஒருபோதும் இவ்வாறு நடந்தது கிடையாது. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எவரும் சட்டத்தை விட உயர்வானவர்கள் கிடையாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். வளர்ச்சியடைந்த நாடுகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்.ஆனால் சட்டத்தை அமுல்படுத்தும் போது சிலர் குழப்பமடைகிறார்கள். அந்த குழப்பத்தைப் பார்த்து நாம் எடுத்த முன்னெடுப்புகளை மாற்ற முடியாது. பஸ்களில் ஆட்களை அழைத்து வந்து வீதியில் கோசம் எழுப்பியதற்காக சட்ட நடவடிக்கைகளை மாற்ற மாட்டோம். என்னைத் தவிர வேறு யாரும் சட்டத்தை நிலைநாட்ட மாட்டார்கள்.அரசியல்வாதிகளின் பல்வேறு சலுகைகளை நீக்கியுள்ளோம். 5 வருடங்கள் பணியாற்றிய எம்.பிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பலருக்கு இந்த சலுகை கிடைத்தது. அது தவறு என பொதுமக்கள் கூறினார்கள். அதனை நிறுத்த முடிவு செய்தோம். அதனை நிறுத்தினால் தற்கொலை செய்வதாக சொன்னார்கள். வழக்குத் தாக்கல் செய்வதாக எச்சரித்தார்கள். ஆனால் நாம் அவற்றுக்கு அஞ்சவில்லை. எம்.பிகளின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்தோம்.முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வீடு, வாகனம் என்பன வழங்கப்பட்டன. அரசாங்கத்தினால் தான் மின்கட்டணம், நீர்க்கட்டணம் என்பன செலுத்தப்படுகிறது. அவற்றை நாம் நிறுத்தினோம். சிலர் வீட்டை விட்டும் வெளியேற முடியாது என்றனர். வீட்டை விட்டும் வெளியேறினால் மக்களை திரட்டி சுற்றிவளைப்பதாகச் சொன்னார்கள். அதனை நாம் பொருட்படுத்தவில்லை. நாம் சட்டத்தை உருவாக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். அதன் பின்னர் அவர்கள் சத்தமின்றி வெளியேறினார்கள்.வீண் விரயங்களை குறைக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்கு பணியாற்றுபவர்களாக மாற்ற வேண்டும். அதனை நாம் செய்திருக்கிறோம்.மக்களின் பொருளாதார நிலையை கட்டியெழுப்ப வேண்டும். படிப்படியாக நாம் பொருளாதாரதை மேம்படுத்தி வந்தோம். ஆனால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.டித்வா சூறாவளியினால் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பாரிய தாக்கம் ஏற்பட்டது. சுனாமியை விட பாரிய அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. டித்வாவுக்கு முகங்கொடுத்து மீண்டும் முன்னேறிச் செல்ல முடிவு செய்தோம்.மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகும்போது மக்களைக் கவனித்துக் கொள்ளும் அரசாங்கம் இது. ‘டித்வா’ சூறாவளியின் போதும், மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையின் போதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாங்கள் பெருமளவு தொகையை ஒதுக்கினோம். நாம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளோம். ஆனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் யுத்த சூழல் தீவிரமடையத் தொடங்கியது. எரிபொருள் இறக்குமதியின் போது டொலரின் மதிப்பு உயர்ந்தது. இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. இதனால் அதிகளவிலான டொலர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. நமக்கு டொலர் வருமானம் கிடைக்கும் சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ஏற்றுமதி வருமானங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி குறிப்பிட்டளவு உயர்ந்து வருகிறது.சிலர் இது 2022 ஆம் ஆண்டைப் போன்ற நிலை என்று கூறுகிறார்கள். ஆனால் 2022 ஐப் போல ஒருபோதும் ஆகாது. 2022 இல் நம்மிடம் ரூபாயும் இருக்கவில்லை, மத்திய வங்கியிலும் டொலர் இருக்கவில்லை. இன்று அவ்வாறான நிலைமை கிடையாது. சந்தையில் டொலர் தட்டுப்பாடு நிலவினாலும், மத்திய வங்கியில் கிட்டத்தட்ட 7,000 மில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது. அன்று மத்திய வங்கியில் வெறும் 50 மில்லியன் டொலர்களே இருந்தது. இன்னும் சில தினங்களில் நமக்கு மேலும் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன. அப்போது கணிசமான டொலர் இருப்பு நம்மிடம் இருக்கும்.இருப்பினும், நாம் நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு , பால்மா, உரங்கள் ஆகியவற்றில் எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அன்று எரிபொருள் இல்லாமல் போனது, பால்மா இல்லாமல் போனது, எரிவாயு இல்லாமல் போனது, உரங்கள் முற்றாக இல்லாமல் போயின. அத்தகையதொரு நிலைமை மீண்டும் ஏற்படாது. ஆனால் நமக்கு ஓரளவுக்கு அழுத்தம் உள்ளது. அதை நாம் முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாட்டின் உட்புறத்தில் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டோம். டித்வா சூறாவளியை எதிர்கொண்டோம். அது ஒரு உள்ளகப் பிரச்சினை. ஆனால், இது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலையினால் ஏற்பட்டது. இதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.இப்போது பலர் இந்த நிலைமை 2022 ஐப் போன்றதுதான், கோட்டாபயவிற்கு நடந்ததேதான் இவருக்கும் நடக்கும் என்று ஒரு கருத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அப்படி எதுவும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இப்பிரச்சினையைத் தீர்ப்போம். நாம் ரூபாய்களை ஈட்டியுள்ளோம். அதனால்தான் இன்று இப்பிரதேசத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக நிதியை ஒதுக்கீடு செய்ய நமக்கு முடிந்தது” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா,கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி இங்கு வருகை தந்திருந்த போது, இப்பிரதேசத்தின் மிக அடிப்படையான பிரச்சினை என்னவென்று மக்களிடம் வினவினார். நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த இந்த கலாசார நிலையத்தின் பணிகளை நிறைவு செய்து தருமாறே மக்களின் கோரிக்கையாக இருந்தது. மக்களின் அந்த வேண்டுகோளுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட உரையின் போது, நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார். அதேபோன்று, அதன் பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான மீதித் தொகையையும் 2027 ஆம் ஆண்டில் வழங்குவதற்கு அவர் உடன்பட்டுள்ளார். இந்த வகையில் நிந்தவூர் மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தமைக்காக மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் .கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர,24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்தத் திட்டம் நிறைவு பெறாத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களில் இந்தத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாரிய வெற்றியாகும். மட்டக்களப்பு நூலக திறப்பு விழாவில் ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று இந்த அரசாங்கம் இன,மத பேதமின்றி செயற்படும் அரசாங்கமாகும். இந்த கலாசார மண்டபத்தின் ஊடாக இன,மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளம் இடப்படுகிறது.30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனியும் தேவையில்லை. கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் ஊடாக இந்த நாட்டை மேலும் முன்னேற்றலாம்.அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ உள்ளிட்ட அதிதிகளின் பங்கேற்புடன் இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Israel push to take more of Gaza'Where do we go? To the sea?' asks Gaza residentIsraeli push to take more of Gaza raises alarm as Hamas warns against escalationBy Dawoud Abu Alkas, Haseeb Alwazeer and Nidal Al-MughrabiMay 29, 2026SummaryHamas says Netanyahu's plan equates to ethnic cleansingCeasefire deal left contentious issues unresolvedAnalysts warn move risks increase in violence'Where do we go? To the sea?' asks Gaza residentGAZA/CAIRO, May 29 (Reuters) - Hamas said on Friday that Israeli Prime Minister Benjamin Netanyahu's declaration that his country would expand its area of control in Gaza was a dangerous escalation, as European states and residents of the Palestinian territory also voiced alarm at the plan.Under a ceasefire deal in October Israel's military was to remain in control of 53% of Gaza, but Netanyahu said on Friday that it would expand that area to an initial 70%, without laying out details or a timeline.The Palestinian militant group, which triggered two years of devastating warfare in Gaza with its October 7, 2023, attack on Israel, described his comments as a plan for ethnic cleansing and forced displacement of Palestinians.MAJOR DISPUTES POSTPONED"Any attempt to impose a new reality of occupation in Gaza is null and illegitimate," said Ismail al-Thawabta, head of the Hamas-run Gaza government media office, adding that Netanyahu's statement "represents a dangerous escalation".More than eight months into the ceasefire, and with global attention fixed on the war in Iran, Gaza's underlying conflict remains stubbornly unresolved with continued Israeli attacks, little aid reaching civilians and the risk of major new violence.Israel has already expanded its area of control in Gaza from the 53% lying behind a "yellow line" mapped into the ceasefire deal up to around 64%, with an area it has designated as restricted in maps shared with aid groups.Map of Gaza showing the yellow line boundary of Israeli control in late 2025 and an orange line showing an expanded restricted area that emerged in early 2026, indicating a deeper push into the enclave.Map of Gaza showing the yellow line boundary of Israeli control in late 2025 and an orange line showing an expanded restricted area that emerged in early 2026, indicating a deeper push into the enclave.Any further reduction in space available to the more than 2 million Gaza residents who are mostly crammed into tents in the tiny Palestinian territory risks worsening already dire conditions there."Where do we go? To the sea? There is no space," said Mohammed al-Shagra, 72, in Khan Younis.Last year's deal brokered by U.S. President Donald Trump established a Board of Peace to oversee a phased ceasefire, and was ratified by the United Nations Security Council.However, many of the toughest areas of dispute including the disarmament of Hamas, a full Israeli withdrawal and the make-up of a Gaza government were postponed to later in the process. The Board of Peace negotiators have been talking to both sides on the disarmament issue.Israel and Hamas have repeatedly accused each other of violating the truce. Israeli strikes in Gaza have killed more than 900 Palestinians since the start of the truce while Palestinian militant attacks have killed four Israeli soldiers.Israel's military and the prime minister's office did not immediately respond to a Reuters request for additional information and comment on Netanyahu's statement.A spokesperson for the Board of Peace said it would not have a comment on Netanyahu's statement.A British foreign ministry spokesperson said any further expansion of Israeli control in Gaza would be unacceptable and risk exacerbating an already dire humanitarian situation.Fellow permanent U.N. Security Council member France did not immediately respond to requests for comment.A German foreign ministry spokesperson said Germany was concerned about Israeli plans to take more of Gaza and opposed a permanent division of the Palestinian territory.RISK OF FURTHER VIOLENCEFacing elections this year and under pressure for Israel's failure to secure its strategic goals in wars in Iran and Lebanon, Netanyahu may be seeking to bolster his standing with voters."He's determined to look tough in front of the electorate and he's blamed by his opponents for having fought this seven-front war, but having won none of the wars," said Max Rodenbeck, Israel-Palestine Project Director at International Crisis Group."Unless there's some sort of pushback from the Trump administration it really does risk a return to something very bloody," he added, pointing to other ways in which Israel has been ramping up pressure on Hamas including continued aid restrictions on Gaza and strikes targeting Hamas figures.For people inside Gaza, where nearly all the population had to flee their homes during the war and with most still living in temporary tents or shelters, the prospect of increased Israeli military pressure is alarming."We see no ceasefire or anything and they keep advancing beyond the yellow line. For how long will the world stay silent?" said Mohammed al-Jundi, a displaced man in Gaza City.In Israel, a return to tougher military pressure is seen by security hawks as the only way to force Hamas to disarm and achieve a longer-term agreement."It looks as if we are taking a step towards another collision. But I believe this time it will be much shorter and maybe would open the path towards a new future," said Kobi Michael, a researcher at Israel's Institute for National Security Studies and a former official in the country's strategic affairs ministry.Reporting by Dawoud Abu Alkas and Haseeb Alwazeer in Gaza, Nidal al-Mughrabi in Cairo and Rami Ayyub in Jerusalem; Additional reporting by Alistair Smout in London; Writing by Angus McDowall; Editing by Aidan Lewis
மே நாள் வாழ்க! தொழிலாளர் மே நாள் வாழ்க! முள்ளிவாய்க்கால் தேசிய தினம் வெல்க!!அன்பார்ந்த தமிழீழ மக்களே, போர் ஓய்ந்த போராளிகளே, ENB வாசகர்களே, தோழர்களே, பெண்களே, இளையோரே அனைவருக்கும் புரட்சிகர மே முதல் நாள், மே 18 முள்ளிவாய்க்கால் நாள் வாழ்த்துகள்.மே முதல் நாள் உலகத் தொழிலாளர் தினம், மே 18 முள்ளிவாய்க்கால் ஈழத் தேசிய தினம். ஈழ தேசியப் பிரச்சனை உலக ஜனநாயகப் பிரச்சனையின் பகுதியாகிவிட்ட சகாப்தத்தில் நாம் வாழ்கின்றோம்.எனவே தான் மே முதல் நாளையும், பதினெட்டாம் நாளையும் எமது செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், சரிபார்த்து முன் செல்லவுமான பொதுத் தருணமாக நாம் வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.எமது மே 2026 முழக்கங்கள்: அதாவது தொடர்ந்துவரும் உடனடி எதிர்காலத்தில் நமது நடைமுறை அரசியல் -பிரச்சாரச்-செயற்பாடுகளை, நெறிப்படுத்தும் கொள்கை,கோட்பாட்டு நிலைப்பாடுகள்.புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்கப் போராடுவோம்!3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு தம் நாட்டு உழைக்கும் மக்களையும்,அண்டை அயல் நாடுகளையும் தயார்செய்து, யுத்தத்துக்குள் தள்ளுவதை முறியடிப்போம்! 5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிர்வோம்! பண ஆதரவளிப்போம்!!அன்பார்ந்த தமிழீழ மக்களே, உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்படும் தேசங்களே;தொடர்ந்து வந்த சுமைகளோடு மேலதிகமாக அமெரிக்க இஸ்ரேலிய பாசிசபிற்போக்கு முகாம், ஈரான் நாட்டின் மீது தொடுத்த அநீதியான நாசகார பாசிச ஆக்கிரமிப்பு நிர்மூல யுத்தம் மேலதிக சொல்லொணாச் சுமைகளை, உலக மக்கள் மீது சுமத்திவிட்டுள்ளது. ஈரான் மட்டுமல்ல உலகின் வேறு பல பாகங்களிலும்,நாடுகளிலும், தேசங்களிலும் போர் மூண்டெரிந்தவண்ணம் உள்ளது.புதிய போர்க்களங்கள் திறக்கப்படவுள்ளன.`` மூன்றாம் உலகப் போர்`` பற்றிய பேச்சு சர்வசாதரணமாகிவிட்டது.மட்டுமல்ல அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக ஈரான் போரில் இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், உலக அமைதி, சமாதானம் மீது அக்கறை கொண்டுள்ள மானுடர் மத்தியில் கரிசனைக்குரிய தேடலும், விவாதமும் இடம் பெற்று வருகின்றன.அவர்களது கவலை அதிகரித்து வருகின்றது.இராணுவ (பாதுகாப்பு) துறையில் நேற்றோ(NATO) பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது.அமெரிக்கா முன்போல் நேற்றேவுடனான உறவைப் பேணுவதற்கு தயாராக இல்லை. ஏனைய ஐரோப்பிய நாடுகள் சில அமெரிக்காவில் தங்கியிராத நேற்றோவை கட்டியமைக்க முயல்கின்றன. பிரான்ஸ், ஐரோப்பாவுக்கு என தனியான ஒரு இராணுவக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்ப நெடுங்காலமாக குரல் எழுப்பிவருகின்றது.பாதுகாப்புத் துறையில் மட்டுமல்ல, இதர பல்வேறு துறைகளிலும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவுகின்றன. இவை ரம்ப் நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் வரைக்குமானதா, அல்லது ஒட்டு மொத்த ஏகாதிபத்திய அமைப்பு முறையும் சார்ந்த, அதில் வேர்கொண்டு முழு அமைப்பு முறையையும் உலுக்கி உலுப்புகின்ற பிரச்சனையா என்கிற கேள்வி உள்ளது.உலகளாவிய பொருளாதார நிலைமையின் ஒட்டுமொத்த அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு நாடு, ஒரு நாட்டின் ஆட்சி முறை, அதன் அரசுத் தலைவர் அல்லது தலைவி சார்ந்ததாக அல்லாமல் முழு அமைப்பும் சார்ந்ததாகவே உள்ளது.உதாரணத்துக்கு-மிகச் சிறந்த உதாரணம்- நேற்றோவை எடுத்துக்கொண்டால் நாட்டுக்கு நாடு வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், அனைத்து நாடுகளிலும் படைத்துறைச் செலவினம் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்து, தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.இதன் தனிக்குறிப்பான தன்மை, இந்த இராணுவச் செலவினமும் ஆயுதப் பெருக்கமும், நவீன மயமாக்கலும் தனி ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பன்மடங்கு அதிகமான, அவசியத்துக்கும் அப்பாற்பட்ட அதிகரித்த தயாரிப்புகளாக இருப்பதாகும்.இலங்கை போன்ற சின்னஞ்சிறிய நாட்டிலும், கிரீன்லாண்ட் போன்ற மிகச் சிறிய சனத்தொகை கொண்ட தீவிலும் இதனைத் தெளிவாகக் காணமுடியும்.மேலும் எழுந்து வரும் ரசிய சீன ஏகாதிபத்தியவாதிகள், இறுதியாக அமெரிக்கவுடனான ஒரு போருக்காகவே தம்மை தயார் செய்து வருகின்றனர்.போதாததற்கு பிராந்தியம் பிராந்தியமாக வலிமைகொண்ட விரிவாதிக்க அரசுகளும், அசுர இராணுவ வலிமையைக் கட்டமைப்பதும், தமக்கிடையே கூட்டமைப்பதும் ஒரு போக்காகிவிட்டது!இவ்வாறாகத்தானே மூன்றாம் உலகப் போர் என்பது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிட்டது.`` ஏகாதிபத்தியம் என்றால் போர்`` என்ற மாமேதை லெனின் மார்க்சிய மதிப்பீடு உண்மை என்பது வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகிவிட்டது.உலகப் போர் என்பது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிட்டது, என்பதின் பொருள் மூன்றாம் உலகப் போர் முழு அளவில் ஆரம்பித்துவிட்டது என்ற பொருளில் அல்ல,மாறாக அதை நோக்கிய இராணுவப் பயணம் ஆரம்பித்துவிட்டது என்கிற பொருளிலேயே ஆகும்.ஏகாதிபத்தியம் ஏன் போரை நாடுகின்றது?வசதி கருதியும், தற்காலத்துக்கு சமாந்தரமானதுமான ஒரு காலப்பகுதியான சுமார் ஒரு நூற்றாண்டுக்கு சற்று மேற்பட்ட முதல் உலகப் போர் முதலான காலத்தை எடுத்துக் கொண்டால் மட்டும் கூட `எண்ணற்ற` போர்களை எண்ண முடியும்!எனவே போர்கள் இருந்து வருகின்றது, தொடர்ந்தும் இருந்து வரும். வர்க்க சமுதாயம் உள்ள வரையில், வர்க்கப் பகைமை இணக்கம் காணா நிலையை எட்டும் வேளைகளில் எல்லாம் போர் மூளும், நிகழும், தொடரும்.ஒரு சில மோசமான முல்லாக்கள் மற்றும் பயங்கரவாதிகளினதோ, அல்லது சுதந்திர உலகின் ஒப்பற்ற தலைவர்களினதோ கர்ப்பத்தில் இருந்து போர் பிரசவிப்பது கிடையாது.மாறாக அது புறவய உலகின் சமூக வர்க்க முரண்பாடுகளின் இணக்கம் காணவியலா பகைமையின் அவசியத்தில் இருந்து எழுகின்றது.இதனால் போரை ஆய்வு செய்வதானால் இந்த அவசியத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.என்றும் எமக்கு முன்னுதாரணமான மா மேதை லெனின் முதல் உலகப் போரின் குறிபொருள் குறித்து கூறியதாவது: ``அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டது. ஆயுத தளவாடங்களின் பெருக்கம், முன்னேறிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் அதி உயர் கட்டமான ஏகாதிபத்தியக் கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைதல், மற்றும் அதிகம் பிற்பட்டதான கிழக்கு ஐரோப்பிய முடியாட்சிகளின் அரசவம்சங்களின் நலன்கள் ஆகியவை இந்தப் போரைத் தவிர்க்க முடியாத வகையில் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும்,அவ்வாறு ஏற்படுத்தியுள்ளன. பிரதேசங்களைக் கவர்ந்து பறித்தல், பிறதேசங்களை அடிபணிய வைத்தல், போட்டியிடும் தேசங்களை நாசப்படுத்தல், அவற்றின் செல்வங்களைச் சூறையாடுதல், ரசியா,ஜேர்மனி,பிரிட்டன் மற்றும் இதர நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புதல், தொழிலாளர் ஒற்றுமையைக் குலைத்து தேசிய வாதம் மூலம் அவர்களைப் பயனற்றவர்களாக்குதல், பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்த அவர்களது முன்னணிப் படையை அழித்தொழித்தல்- இவையே தற்போதைய போரின் ஒரே மெய்யான சாராம்சம் மற்றும் குறிபொருள் ஆகும். ``போரும் ரசிய சமூக ஜனநாயகமும்-லெனின்இத்தகைய ஒரு சமுதாய அவசியம் இன்று தயாரிப்பு நிலையில் இருக்கும் மூன்றாம் உலகப்போருக்கும் உண்டு. அந்த முன் நிபந்தனைகள் தான் இன்றைய போர்த் தயாரிப்புகளைத் தூண்டும் சமூக சக்தி ஆகும்.முதல் உலகப் போரின் குறி பொருள் குறித்த லெனின் வரையறை பொதுக் கோட்பாடுகள் என்ற வகையில் இன்றைய நிலைமைகளுக்கும் பொருந்தும். ஆனால் குறிப்பான தன்மைகள் வேறானவை, தனி விசேசமானவை, அவை இன்றைய குறிப்பான புறச் சூழலில் இருந்து, ஆய்ந்து அறியப்படவேண்டியவை. இதனை நிகழ்ச்சிப் போக்குகளை பின் தொடர்ந்து சென்று, கை நாடி பிடித்துத்தான் கண்டறியமுடியும். அந்தப் பருண்மையான ஆய்வில் இருந்துதான் நமது `அரசியல் இராணுவ போர்த் தந்திரம், மற்றும் செயல் தந்திரங்களை வகுத்துக்கொள்ள முடியும்.அதுவே இன்றைய மே நாளில் நாம் தேர்ந்து கொள்ளும் தத்துவார்த்த பணியாகும்.எமது நடைமுறைப் பணி என்ன?முதலாவதாகவும்,முதன்மையாகவும் நமது நடைமுறைப் பணி என்னவென்றால் இந்த நாசகார மனிதப் பேரழிவுப் போர் முழு அளவில் ஒரு உலகப் போராக வெடிப்பதைத் தடுப்பதாகும்.எமது அரசியல் பிரச்சாரப் பணி அனைத்தும் இந்த ஒற்றைக் குறிக்கோள் மீது குவிக்கப்படவேண்டும்.உலகப் போர் நிலைமை குறித்த ஒரு பொதுச் சித்திரம்.1) அமெரிக்காவின் தனி உலக மேலாதிக்க ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பு தகர்ந்து, ரசிய சீன நாடுகள் போட்டி ஏகாதிபத்திய நாடுகளாக எழுந்து, ஏகபோகத்துக்காகப் போரிடும் ஒரு பல்துருவ உலக ஒழுங்கமைப்பு உலகில் உருவாகியுள்ளது.2) அமெரிக்காவினதும் இதர ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளினதும் ஆளும் வர்க்கங்களுக்குள் ஒரு புதிய அணி உருவாகிவருகின்றது. இது கடந்த பத்து அல்லது இருபது குறுகிய அண்மைய காலத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாகவும், அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் இருந்தும் எழுந்து வந்திருக்கும் புதிய ஒரு நிகழ்வாகும். அமெரிக்காவில் இது முன்னைய ஆளும் கும்பல்களைக்காட்டிலும் ஆகப் பிற்போக்கானதும், ஆகப் பாசிசத் தன்மை மிக்கதும், ஆக ஒழுங்கு முறை கட்டுப்பாடு அற்றதும், ஆக ஒழுக்கம் கெட்டதுமான கொலைபாதக காட்டுமிராண்டிக் கும்பலாக உள்ளது. இது தான் போர்த்தயாரிப்புகளை முன்னின்று நடந்துகின்றது.முந்தி உந்தி தள்ளுகின்றது.3) இரண்டாம் உலகப் போரை அடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையின் கீழ் இதர ஏகாதிபத்தியவாதிகள் இணைந்து மற்றும் அடிபணிந்து உருவாக்கிய அனைத்து ஒழுங்கமைப்பையும் ,இக் கும்பல் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றது.இதற்கு மாற்றாக கடவுளுக்கு ஈடான ஒரு மன்னனையும், அவனைச் சூழ்ந்த ஒரு ஆயுதமேந்திய அப்போஸ்தலர் (apostle) சபையையும் கொண்டு உலகை கட்டியாள திட்டமிடுகின்றது.இதனை பாசிச வன்முறையின் மூலம் மட்டுமே சாதிக்க இயலும் என்பதால் போர் பொதுவிதியாக மாறிவருகின்றது.4) இது ஏகாதிபத்திய முகாமுக்குள்ளும், அணிகளுக்குள்ளும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து தீவிரப்படுத்துகின்றது.5) எனினும் உலகப் போர் விடயத்தில், ``அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும்`` அந்தக் கம்பத்தைச் சுற்றியே வட்டமிடுகின்றன.ஏனெனில் இவை அனைத்தும் அந்த நிதிமூலதனக் கம்பத்துடன் கட்டுண்டுள்ளன.எனவே அவர்கள் அனைவரும் ஒருங்கு சேர இந்த `` ஆயத்தத்தில்`` ஈடுபட்டுவருகின்றன.முரண்பாடு என்பது இதற்கு உட்பட்டதே ஆகும்.இதுவரையில்!6) குறிப்பாக தொடர் காலனிய நாடுகளின் முதலாளித்துவ பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களும்,கட்சிகளும், அரசாங்கங்களும் தாம் சேரும் அணியின் வெற்றிக்காக உள்நாட்டு உழைக்கும் மக்களைப் பலிக்கடாக்களாக்க தயாராகிவருகின்றன.7) இப்போர்த் தயாரிப்பு முயற்சிகள் தேசியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்துகின்றன.இதனால் தேசங்களின் சுயநிர்ணய உரிமை பாட்டாளிவர்க்கம் உயர்த்திப் பிடிக்கவேண்டிய தவிர்க்க இயலாத ஜனநாயகக் கோரிக்கையாகவுள்ளது.8) மேலும் ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் ஒரு தேசம் ( உ+ம் இலங்கையில் ஈழம்) மட்டுமல்ல, அதிகாரபூர்வ அந்த நாடே கூட ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியவைக்க அரசியல் இரணுவத் தலையீடுகள் கூர்மையடைகின்றன.(உ+ம் ஈரான்). அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் (அவர்கள் எவ்வளவுதான் பிற்போக்கானவர்களாக இருந்தாலும்) ஆட்சியதிகார உரிமை-இறையாண்மை-அச்சுறுத்தப்படுகின்றது, அல்லது பலவந்தமாகப் பறிக்கப்படுகின்றது.இத்தகைய சூழலில் அந்நாடு போராடும் ``தாய் நாட்டின் தற்காப்பை`` ஆதரிப்பது ஜனநாயகக் கடமையாகும். இன்றைய உலகச் சூழலில் இந்தியா.இந்தியா நிலப்பரப்பாலும் சனத்தொகையாலும் ஒரு பரந்த நாடு.ஆசியக் கண்டத்தில் ஒரு முக்கிய நாடு.இவை போன்ற காரணங்களால் இந்திய ஆளும் வர்க்கத்தின் பேர ஆற்றல் மிகவும் வலுவானதாகும். இரட்டைத்துருவ உலக ஒழுங்கு நிலவிய காலத்தில் கூட இந்தியா ஒரு புறம் அமெரிக்க பிரித்தானிய உறவையும், மறுபுறம் சோவியத் ஜூனியனுடனான உறவையும் அக்கம் பக்கமாக பேணிவந்தது.இப்போதும் அப்படியே நடந்துகொள்கிறது,இந்த சா-நக்கி-யத்தில் இந்தியா பேர் போனது, புகழ் பூத்தது.உக்ரைன் போரில் தாம் நடுநிலை வகிக்கவில்லை, சமாதானத்தின் பக்கம் நிற்பதாகக் கூறுகின்றது.மறுபுறம் இஸ்ரேலோடு `அண்ணன் தம்பி` உறவு கொண்டாடி, கட்டியணைத்து முத்தமிட்டு, பாலஸ்தீனத்தைக் காட்டிக்கொடுக்கின்றது. அமெரிக்காவுடன் ஐரோப்பா மற்றும் ரசியா கொண்டுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துவருகின்றது. உடனடியாக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராகவும், தொலைநோக்கில் உலகப்போர்த் தயாரிப்புக்காகவும் பாரிய அளவில் படைப் பெருக்கம் செய்துவருகின்றது.அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானுக்கு எதிராக கட்டவிழ்த்த நாசகார பாசிச ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இந்தியா எடுத்த நிலை வெட்கக் கேடானது. நிராயுதபாணிகளான தனது சொந்த விருந்தினரை அமெரிக்கா படுகொலை செய்ய காரணமாக இருந்தது இந்தியா. ஒரு கண்டனம் தெரிவிக்கக் கூட வக்கற்றுக் கிடந்தது.ஒரு பல்லிமுட்டை அளவு நாடு சிறீ லங்காவுக்கு இருந்த தைரியம் கூட இந்த அகண்ட பாரதத்துக்கு இருக்கவில்லை.இதன் மூலம் இந்தியா தன்னை மட்டுமல்ல BRIC அமைப்பையும் அவமானத்துக்கு உள்ளாக்கியது.இவையெல்லாம் `இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தந்திரக் கூட்டாளி இந்தியா` என்ற உறவு நிலை இன்றும் தொடருவதையே காட்டுகின்றது. திருவாளர் டொனால்ட்டுடன் உடன் இந்தியாவுக்குள்ள சச்சரவு வர்த்தகம் மற்றும் உடல் நலம் சார்ந்தது!இலங்கை எதிர்நோக்கும் அபாயம்:1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் இப்போதும் அமுலில் உள்ளது. தற்காலிக வட கிழக்கு மாகாண இணைப்பை வழக்காடி தகர்த்த செஞ்சட்டை வீரம், ஒப்பந்தத்தை அப்படியே வைத்துள்ளது.ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்கள விவசாய இளம் சந்ததியை பலிகொடுத்துவிட்டு IPKF நினைவு மண்டபத்துக்கு காவல் காத்துவருகின்றது ஜே.வி.பி. பிக்கு முன்னணி அனுரா ஆட்சி. மறுபுறம் SOFA ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா நேரடியாகவே மிரட்டி தலையீடு செய்கின்றது. அநியாய IMF கடனில் ஜே.ஆர், ரணில் கடைப்பிடித்த அதே நிதிமூலதன அடிமைப்பாதையில் நாட்டை `` மீட்டு`` வருகின்றது அனுரா அரசு!ஈரான் போர் நிரந்தரமாக ஓயாது.பெப்ரவரி 28, 2026 இற்கு முந்திய நிலைக்கு இனி உலகமோ, மேற்கு ஆசியாவோ திரும்பாது.மேற்காசிய மறுபங்கீட்டுப் போருக்கு டியாகோ காசியா இராணுவத்தளம் எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஈழ-திருமலைத் துறைமுகமும் முக்கியமானதாகும்.இங்கே அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும். கொத்திக் கலைக்கப்படுவது இலங்கை மக்களாக இருக்கும்.இத்தகைய அபாயத்தில் இருந்து இலங்கையையும், உலகத்தையும் பாதுகாக்க மீண்டும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் செயலுக்கு அறைகூவல் விடுக்கின்றோம். 1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்க போராடுவோம்!3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை முறியடிப்போம்! 5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! பண ஆதரவளிப்போம்!!புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!இறுதி வெற்றி உழைக்கும் ஈழமக்களுக்கே!!!புதிய ஈழப் புரட்சியாளர்கள். ඊලම් නව බෝල්ෂෙවික්වරු Eelam New Bolsheviks (ENB)