UPI ID : enb@axis.com
Gnanasara Thera reportedly missing after SC annuls presidential pardonSeptember 13, 2026 News WireBodu Bala Sena (BBS) General Secretary Ven. Galagoda Aththe Gnanasara Thero is reportedly missing after the Supreme Court annulled the presidential pardon granted to him in 2019.The Sunday Island reports that prison officials visited the Thero’s temple in Nawala, Rajagiriya, to take steps to return him to prison to serve the remainder of his six-year sentence.However, monks at the temple had reportedly informed prison officials that they were unaware of his whereabouts.Gnanasara Thero now faces having to serve the majority of his original six-year prison sentence, as he had served only around nine months before former President Maithripala Sirisena granted him a presidential pardon in May 2019.The development follows the Supreme Court ruling declaring the 2019 presidential pardon null and void.The three-member Supreme Court bench held that the pardon was arbitrary and had violated the public trust and principles of natural justice.Gnanasara Thero had been serving the six-year sentence for contempt of court when he received the presidential pardon in May 2019. (Newswire)
கனடாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த கோரிக்கை 'நகைப்புக்குரியது' - மேலும் வரிகள் விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்- .ராய்ட்டர்ஸ் செய்திசெப்டம்பர் 17, 2026 பிரஸ்ஸல்ஸ், செப். 17 (ராய்ட்டர்ஸ்) - கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக ஆக்குவது தொடர்பான ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துச் சென்றால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார் ."அவர்கள் அப்படிச் செய்தால், அது சிறிதளவும் விரோதமான செயல் என்று நான் கருதினால், நான் மிகக் கடுமையான வரிகளை விதிப்பேன் அல்லது பல விஷயங்களுக்கு ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன்," என்று வட கரோலினாவில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் கூறிய டிரம்ப், அந்த முன்மொழிவை "சிரிப்புக்குரியது" என்றும் குறிப்பிட்டார்."அது ஒரு நல்ல நோக்கமாக இருந்தால், பரவாயில்லை. அது ஒரு கெட்ட நோக்கமாக இருந்தால், நாங்கள் ஐரோப்பா மீது மிகக் கடுமையான வரிகளை விதிப்போம்," என்று அவர் மேலும் கூறினார்.கருத்து கோரி மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஐரோப்பிய ஆணையம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.ஐரோப்பிய ஒன்றியத்தின் புவிசார் அரசியல் முடிவுகளை வீட்டோ செய்யும் அதிகாரம் அமெரிக்காவிற்கு இல்லை என்று பிரான்சின் ஐரோப்பிய அமைச்சர் பெஞ்சமின் ஹடாட் கூறினார்."ஐரோப்பியர்களின் அரசியல் மற்றும் புவிசார் அரசியல் திசையைத் தேர்ந்தெடுப்பது அமெரிக்காவின் பொறுப்பல்ல - வேறு யாருடைய பொறுப்பும் அல்ல" என்று அவர் வியாழக்கிழமை பப்ளிக் செனட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்."வெளிப்படையாகவே விரோதப் போக்குடைய உலகம்" என்று அவர் வர்ணித்த சூழலில், நட்பு நாடுகளிடையே உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில், கனடா பிரதமர் மார்க் கார்னி கலந்துகொண்ட தனது வருடாந்திர ஐரோப்பிய ஒன்றிய உரையின்போது, வான் டெர் லேயன் புதன்கிழமை இந்த முன்மொழிவை முன்வைத்தார்.ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைகளில் போர் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் அந்த கூட்டமைப்பும் கனடாவும் அமெரிக்கா மற்றும் பெருகிவரும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட சீனாவுடனான வர்த்தகப் பதட்டங்களைச் சமாளித்து வருகின்றன.இந்த மாதத் தொடக்கத்தில், டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து ஒட்டாவாவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து, பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு வரிகள் விதிக்கப்பட்டதால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு "தனித்துவமான கூட்டணியை" நாடுவதாக கார்னி கூறியிருந்தார்.சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாத நெகிழ்வான கூட்டணிகளை ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்று ரீதியாக எதிர்த்து வந்துள்ளது."இதன் உண்மையான அர்த்தம் யாருக்கும் தெரியவில்லை" என்று கூறி, அந்த முன்மொழிவு குறித்து ஆச்சரியம் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தூதர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் "அளவுக்கு அதிகமாக வாக்குறுதிகளை அளிக்கிறார், ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போகலாம்" என்ற கவலைகள் இருப்பதாகவும் மேலும் கூறினார்.கார்னி வியாழக்கிழமை காலை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.செய்தி சேகரிப்பு: மரியானா ஹெர்னாண்டஸ், இண்டி லண்டௌரோ; எழுத்து: சார்லோட் வான் கேம்பென்ஹவுட்; தொகுப்பு: கிளாரன்ஸ் பெர்னாண்டஸ் மற்றும் ஹக் லாசன்
தோழர்கள் அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!பாசிச இந்திராவின் 21 மாத கால (from 25 June 1975 to 21 March 1977),அவசரகால (எமெர்ஜென்சி) ஆட்சியில், நாட்டின் உண்மையான விடுதலைக்காகப் போராடிய நக்சல்பாரி தோழர்கள் நரபலி கொள்ளப்பட்டனர். மத்தியுடன் கைக்கோர்த்த கருணாநிதி நிர்வாகம், தமிழ்நாட்டிலுள்ள தோழர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவியது. அப்போதுதான் தோழர் அப்பு வேட்டையாடப்படார். மக்களின் எதிர்புக்கு அஞ்சி எமர்ஜென்சியை விலக்கிக்கொண்ட பிறகு, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காங்கிரஸ், மாநிலத் தரகு எம்.ஜி.ஆர். ஆட்சியோடு கூட்டு சேர்ந்து பாசிச அடக்குறைகளைக் கட்டவிழ்த்தது.`குளத்தை வற்ற வைத்து மீன்களைக் கொல்ல` திட்டமிட்டது. தருமபுரி பகுதியில் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்த `மக்கள் யுத்தக் குழு`வின் பாலன் தோழரையும் படுகொலை செய்தது. அத்தகைய தியாகத் தோழரின் நினைவாகவும், அப்பு உள்ளிட்ட இதுவரையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் உயிர்நீத்த அனைத்து வீரத் தியாகிகள் நினைவாகவும் செப்-12ஐ தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகிறோம்.சற்று ஏறத்தாழ இதே காலத்தில் இந்திரா,கருணாநிதி,எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்கள் ஆகினர்!ஈழக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க இந்திரா முடிவு செய்தார்.மாநிலத் தரகு நிர்வாகங்கள் அதை உறுதி செய்தன.திருத்தல்வாத இந்திய இடதுசாரிகள் இதற்கு முற்போக்கு வர்ணம் தீட்டி கொள்கைப் பிரச்சாரம் செய்தனர்.எம்.ஜி.ராமச்சந்திரனின் பண உதவிக்கு பிரபாகரன் அவர்கள் நன்றி செலுத்தினார்.போட்டிக்கு கருணாநிதி டெலோ,புளொட் குழுக்களை ஊக்குவித்தார்.தமிழக மக்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வளர்ந்து வந்த ஆதரவின் காரணமாக மத்திய மாநில ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து ஒரு இனமானக் கும்பலும், அது சார்ந்த ஒரு ஆதரவு வலையமைப்பும் உருவாகியது.பெருமளவுக்கு இதில் தங்கியிருந்து புலிகள் யுத்தம் செய்தனர். யுத்தம் முன்னேறி வளர்ந்து வந்தது.இவ்வாறு போராட்டம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கணிப்பிட்ட இந்தியா, ஆயுதக் குழுக்களை இலங்கை அரசுடன் சமரசம் செய்து ஆயுதப் போராட்டத்தைக் கைவிட நிர்ப்பந்தித்தது.1985 திம்புவில் இந்தியா தனது உண்மை முகத்தைக் காட்டி ஈழத்தின் முதுகில் குத்தியது. சகோதரப் படுகொலைகளை தூண்டியது. இந்திய ஆக்கிரமிப்புப் படையை ஏவி புலிகளை நிராயுதபாணியாக்க முயன்றது.தோல்விகண்டு மூக்குடைபட்டு திரும்பியது.ஆனாலும் பத்தே ஆண்டுகளில் (1987-1977), இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாதாகிவிட்டது!இது விரிவாதிக்க ஒப்பந்தம், இலங்கை தனது இறையாண்மையை அடகுவைத்த ஒப்பந்தம்.இது முதல் கடந்த 40 ஆண்டுகளில், மொத்தமாக 50 ஆண்டுகளில் இலங்கையை இந்தியா அறிவிக்கப்படாத ஒரு அண்டை மாநிலமாக்கிவிட்டது. அரசியல் பொருளாதாரத் துறைகளில் மட்டுமல்ல, இராணுவ பாதுகாப்புத் துறைகளிலும் அடிமைப்படுத்தி விட்டது.ஈழ தேசத்தை அடிமைப் படுத்தி ஆட்சி செய்யும் சிங்களம் தான் அடிமைப்பட்டுக்கிடப்பது தர்க்க ரீதியில் தவிர்க்க இயலாதுதான்!தனது மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் சந்தர்ப்பவாத ஜே.வி.பி கும்பல் இதற்கு மக்களிடம் அனுமதி கோரவில்லை.மக்களுக்கு பகிரங்கப் படுத்தவில்லை.நாடாளமன்றத்தில் கூட விவாதிக்கவில்லை.ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு சேவகம் செய்யும் குவாட் கூட்டின் மூன்று அடியாள் நாடுகளில் இந்தியா முக்கிய நாடாகும்.இலங்கையை இந்தியாவுக்கு அடிபணிய வைப்பதன் மூலம் குவாட் கூட்டின் இராணுவப் பணிகளில் இலங்கையை கட்டாயமாக இணைக்கின்றது இந்தியா. இதற்கு துணைபோயுள்ளது அனுரா ஆட்சி.இதனை ``அண்டை நாடுகளோடு கொண்டு கொடுத்தல்`` என்று விளக்கமளிக்கின்றது இந்தியா.இந்தியாவும் இலங்கையும் கலாச்சார இரட்டையர்கள் என்று ராமாயணக் கதை அளக்கின்றது!அண்மைக்காலமாக அகண்ட பாரதம் கொஞ்சம் சுருங்கி சுருண்டுவிட்டது.டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகப் பாசிசத்தின் பயிற்சிக் களமாக உள்ளது.இது அடுத்தடுத்த அமெரிக்க ஆட்சிகளில் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்த்துக் கணிக்க வேண்டும்.எனினும் இச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் உலக மறுபங்கீட்டில் இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையில் எந்த மாறுதலும் இதுவரையில் ஏற்படவில்லை.உலக மறுபங்கீட்டுச் சேவகத்தின் விளைவான உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பதற்கும், அண்டை அயல் நாடுகளை தன் குடையின் கீழ் தயார் செய்வதற்கும் இந்தியா, விரிவாதிக்கத்தையே தனது பிரதான ஆயுதமாகக் கொண்டுள்ளது.இந்தியப் பாசிசம் என்பதும் விரிவாதிக்கத்திலேயே கட்டப்படுள்ளது.எனவே நக்சல்பாரி புரட்சிகர தோழர்கள் அப்பு பாலன் நினைவு தினத்தில்;இந்திய விரிவாதிக்க உலக மறுபங்கீட்டுப் பாசிசம் ஒழிக,உலகத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றுபடுகஎன உரத்து முழங்குவோம்!புதிய ஈழப் புரட்சியாளர் 12-09-2026